×

ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : பள்ளிகளுக்கு ஜூன் 24ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

ஹைதராபாத் : ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும் வெயில் வாட்டி வதைத்துகொண்டுதான் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் தற்போதுள்ள வெப்பத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே கடந்த 19ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்தையடுத்து ஜூன் 24ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...