×

சாலையில் வழிவிடாத ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண் : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

புதுடெல்லி: டெல்லியில் பைக்கில் சென்ற பெண் ஒருவர், சாலையில் வழிவிடாத ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே பவானி என்கிளேவ் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது பைக்கில் அங்கு வந்த சப்னா என்ற பெண் வழிவிடக்கோரி ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு திரும்பி வந்த சப்னா, தனது வீட்டில் இருந்த கொண்டு வந்த நாட்டுத்துப்பாக்கியால் ஆவேசமாக டிரைவரை குறிவைத்து சுட்டுள்ளார். நூலிலையில் குண்டடி படாமல் டிரைவர் தப்பியுள்ளார். இதையடுத்து மீண்டும் துப்பாக்கியில் சப்னா குண்டை நிரப்பி கொண்டிருந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் துப்பாக்கியை அந்த பெண்ணிடம் இருந்து பறித்து விட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய...