×

ஈரானில் சிக்கி தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

சென்னை: ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மீன்பிடி தொழிலுக்காக சென்ற தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டில் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி தவித்து வருவதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் நாட்டுக்கு சொந்தமான 3 படகுகளில் தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் பணிபுரிந்து வந்தனர். படகிற்கு சொந்தமானவர் பணம் கொடுக்கவில்லை. உரிய ஊதியம் கொடுக்காத படகு உரிமையாளரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்களது தேவைகளை நிறைவேற்ற முடியாமல் 21 மீனவர்களும் ஆதரவின்றி தவிப்பதாக முதல்வர் பழனிச்சாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே இவ்விகாரத்தில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையி்ட்டு தமிழக மீனவர்களை விரைந்து மீட்டு, உரிய ஊதியத்தை பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதுபானக் கொள்கை முறைகேட்டில்...