×

உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : அடிப்படை கட்டமைப்பு இருந்தால்தான் ஒரு மாநிலம் முழுமையாக வளர்ச்சி பெற முடியும் என்று சென்னை பட்டினம்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும் என அறிவிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டம், மாநில வளர்ச்சிக்கு உதவும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அவசியம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்த அவர், யாரை வேண்டுமானாலும் கமல் சந்திக்கலாம், அது அவரது உரிமை என்று கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை...