×

மின் பயன்பாடு கணக்கெடுக்க சென்றபோது இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்ட மின்ஊழியர்: மன்னார்குடியில் அதிர்ச்சி சம்பவம்

மன்னார்குடி: மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மின்வாரிய ஊழியர் கட்டிப்பிடித்து முத்தமிட்டதுடன் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (42). இவர் மன்னார்குடி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினர் கள்ளிக்குடியில் வசிக்கும் நிலையில், இவர் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் மன்னார்குடியில் உள்ள ஒரு வீட்டிற்கு மின் பயன்பாடு கணக்கெடுக்க ஜெயராமன் சென்றார். அந்த வீட்டில் 21 வயது இளம்பெண்ணும், அவரது ஆண் குழந்தையும் இருந்தனர். இளம்பெண்ணின் கணவர் மளிகை கடைக்கு வேலைக்கு சென்றிருந்தார்.

அங்கு மின் மீட்டர் வீட்டிற்குள் இருந்ததால் உள்ளே சென்ற ஜெயராமன், கட்டணம் 520 வந்துள்ளது என்று அந்த பெண்ணிடம் கூறினார். பின்னர் கட்டணத்தை 100 என்று குறைத்து பதிவு செய்வதுடன், இதுபோலவே தொடர்ந்து குறைவாகவே பதிவு ெசய்வதாகவும் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் உண்மையான தொகையை பதிவு செய்யும்படி கூறியுள்ளார். அப்போது திடீரென்று அந்த இளம்பெண்ணை அணைத்து முத்தம் கொடுத்ததுடன், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட ஜெயராமன் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி, நடந்தவை குறித்து கணவரிடம் செல்போனில் கூறினார்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசில் இளம்பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி அசோகன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் ஜெயராமன் மீது போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்களது உத்தரவின்பேரில் ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...