×

திருவண்ணாமலையில் தனியார் காப்பகத்தில் சிறுமிகள் 11 பேருக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள தனியார் காப்பகத்தில் 11  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, காப்பகத்தில்  தங்கியிருந்த 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் போதிய அடிப்படை  வசதிகள்  உள்ளதா, குழந்தைகள் ஆரோக்கியமாக  உள்ளார்களா என அரசு சார்பில் அமைக்கப்பட்ட  குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த மாதம் 13ம் ேததி  திருவண்ணாமலை  வேங்கிக்கால் தென்றல் நகரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் அதிகாரிகள்  ஆய்வு நடத்தினர். அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்,  சிறுமிகள்,  ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனியார் காப்பகத்தில் இருந்த குழந்தைகள், அரசு  காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு கடந்த 2 மற்றும் 6ம் தேதி   அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 11  சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவமனை   தந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து, குழந்ைதகள் பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர்  காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார்  செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர்  ஹேமமாலினி வழக்குப்பதிந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதில் 2  சிறுமிகள் மட்டும் தங்களுக்கு, காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தனர்.அதன் அடிப்படையில், சகோதரர்களான 15 மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும், காப்பகத்தை நடத்தி வந்த  ரவி, அவரது மனைவி சுஜாதா ஆகியோரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...