×

ராணுவ குடியிருப்புக்குள் புகுந்து நடமாட்டம் குன்னூரில் சிறுத்தையை பிடிக்க கூண்டு

குன்னூர்: குன்னூர் அருகே உள்ள வெங்லிங்டன், ஆரஞ்சுகுரோவ், பேரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்த வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை, வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை பதம் பார்த்து செல்வதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். இதை அடுத்து வனத்துறை சார்பில் ஆரஞ்சுகுரோவ் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

 சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும், இரவு நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும்,  சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 10 பேர் கொண்ட வனக்குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தெரிவித்தார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...