×

முதல்வர் பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்படுகிறது: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: அமைச்சர்களுக்கு மனநிலை சரியில்லை எனக் கூறியதால் தம்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்படுகிறது என்றும் கூறினார்.

மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் அரசியல் கட்சியினர் என்று கூறினார். சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்கள், விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை போலீசார் கைது செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...