×

அசாம் வெள்ளப்பெருக்கு : பலியானவர்கள் எண்னிக்கை 20 ஆக உயர்வு

ஹாலாகாண்டி : அசாமில் வெள்ளப்பெருக்குக்கு பலியானவர்கள் எண்னிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஹாலாகாண்டி உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 727 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி வருவதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய பேரிடர் மீப்பு படையும், மாநில பேரிடர் மீட்பு படையும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிழமை மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 9 ஆயிரம் பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்