×

மதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை......முதல்வர் பழனிசாமி அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையின்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக எய்ம்ஸ் அமைவது எங்கே? என அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, தமிழகத்தில் எங்கே எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று 3 மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து, மத்திய அரசு உயர்மட்டகுழு அமைத்து, மதுரை, தஞ்சையில் எய்ம்ஸ் அமைவதற்கான கட்டமைப்பு மற்றும் அடிப்படை காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் பயன்பெறும் 13 மாவட்டங்கள் மட்டுமின்றி கேரள மாநிலமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதில் மதுரைக்கே அதிக சாதகமான அம்சங்கள் இருந்தன. ஆகையால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...