×

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 335.40 புள்ளிகளாக சரிந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.41 புள்ளிகள் உயர்ந்து 35,417.15 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிறுவன பங்குகள் விலை 0.93% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.45 புள்ளிகள் அதிகரித்து 10,749.90 புள்ளிகளாக உள்ளது.

ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, எம் & எம், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், இன்டஸ் இன்ட் வங்கி, யெஸ் பேங்க், சன் பார்மா, எச்டிஎப்சி லிமிடெட் மற்றும் ஆர்ஐஎல் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.77% வரை அதிகரித்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.19% சரிந்துள்ளபோது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.03% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.16% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 1.15% வரை குறைந்து முடிந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...