×

8 மத்திய சிறைகளில் பேக்கரி தொடங்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

வேலூர்:  தமிழகத்தில் வேலூர், மதுரை, திருச்சி, கோவை, சேலம், பாளையங்கோட்டை, கடலூர், புழல் ஆகிய 9 மத்திய சிறைகள் உள்ளன. இவற்றில் உள்ள கைதிகளின் எதிர்கால நன்மையை கருதி சிறைக்குள் ஒரு பகுதியில் சிறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலை செய்வதன் மூலம் கைதிகள் பணம் ஈட்டுவதோடு, அவர்களுக்கு புதிய தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதன்படி, 9 மத்திய சிறைகளிலும் நன்னடத்தை கைதிகளை கொண்டு விவசாயம், ஓட்டல், முடி திருத்தகம், சலவையகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நன்னடத்தை கைதிகளுக்கான பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  தற்போது கைதிகளுக்கு பேக்கரி அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உபகரணங்கள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் புழல் சிறையில் மட்டும் தற்போது பேக்கரி அமைக்கப்பட்டுள்ளது. கைதிகள் தயாரிக்கும் பிரட் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வேலூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மத்திய சிறைகளில் பேக்கரி அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்க ஒரு சிறைக்கு தலா ₹30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து சிறை காவலர்களுக்கு அந்த பகுதியில் உள்ள பெரிய பேக்கரி நிறுவனத்தில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது