×

வீட்டுக்கடன் உச்சவரம்பு 35 லட்சம் ஆனது

மும்பை: விவசாயம், கல்வி, சிறு குறு துறைகள், ஏழைகளுக்கான வீட்டுக்கடன் போன்றவை முன்னுரிமை துறைகளில் சேர்க்கப்பட்டு, இந்த பிரிவில் இவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதில் வீட்டுக்கடன் உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பெருநகரங்களில் கடன் உச்சவரம்பு 28 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான திட்டங்களில் பலன் பெறுவோரின் ஆண்டு வருவாய் வரம்பு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாகவும் குறைந்த வருவாய் பிரிவிவினருக்கு 6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...