×

நிலக்கோட்டையில் பேஸ்புக் காதலால் விபரீதம் காதலி வீட்டு முன் கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சி

வத்தலக்குண்டு: பேஸ்புக் தொடர்பு மூலம் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதிக்காததால், காதலி வீட்டு முன்பு வாலிபர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). டிப்ளமோ படித்த இவர், கரூரில் தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த எம்.காம் பட்டதாரி சீதாவுடன் (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது) அறிமுகமானார். நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

15 நாட்களுக்கு முன்பு சுரேஷ்குமார் தனது பெற்றோருடன், சீதா வீட்டிற்கே சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளார். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சீதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து வாய்மொழியாக புகார் செய்துள்ளனர். புகாரை விசாரித்த நிலக்கோட்டை எஸ்ஐ ஆனந்தி, சுரேஷ்குமாரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே சீதாவின் பெற்றோர், அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதையடுத்து சுரேஷ்குமார் நேற்று நிலக்கோட்டையில் உள்ள சீதா வீட்டிற்கு சென்று, அவரை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், சீதாவின் குடும்பத்தினர் அவரை விரட்டியடித்தனர். மனமுடைந்த சுரேஷ்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சுரேஷ்குமாரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...