×

லக்னோ உணவக தீ விபத்தில் 5 பேர் பலி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். லக்னோ ரயில் நிலையம் அருகே உள்ள விராட் என்ற தனியார் உணவகத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், ஒரு புறம் தீயை அணைக்கும் பணியிலும், மறுபுறம் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் உணவக கட்டிடம் முழுவதும் தீ பரவியது. 2 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்