×

பீகார் மாநிலத்தில் கார் விபத்து : 6 சிறார்கள் பலி

ஆராரியா : பீகார் மாநிலத்தில் கார் குளத்தில் விழுந்ததில் 6 சிறார்கள் உயிரிழந்தனர். ஆராரியா மாவட்டம்  சிங்கி என்ற இடத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு போரியாரே என்ற இடத்திற்கு குழந்தைகளுடன் சிலர் சென்றுகொண்டிருந்தனர். தரபடி பகுதியில் கார் சென்றுகிண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே வந்த சிறுவனின் மீது மோதாமல் தடுக்க  ஓட்டுநர் காரை திருப்ப முயன்றதாகவும், அப்போது கட்டுப்பாட்டை  இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி அங்கிருந்த குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் 6 முதல் 15 வயது உடைய 6 சிறார்கள் உயிரிழந்தனர். தகவல் அறிந்துவந்த போலீசாரும், மீட்பு குழுவினரும், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடல்களை மீட்டனர். ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டது. இதை போல காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...