×

காவிரி விவகாரத்தில் பிரதான சாமியாக இருப்பது மேலாண்மை ஆணையம் தான் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆணையம் நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் இனி கட்டப்பஞ்சாயத்துக்கு வேலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். காவிரி விவகாரத்தில் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு திரும்பி வருவது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் பிரதான சாமியாக இருப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தான் என்று கூறினார். காவிரி விவகாரத்தில் குமாரசாமி யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஃபிலிம் காட்டுவதற்காகவும், சீன் போடுவதற்காகவும் குமாரசாமி யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சமீபகாலமாக எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். போலீஸ் மாநிலமாக மாறுகிறதா தமிழகம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதால் தான் காவல்துறையினர் தலையிடுகின்றனர் என்றார். அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயன்றால் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேலம் - சென்னை 8 வழி பசுமை விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் அமைச்சர் ஜெயக்குமார் நழுவினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...