×

சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க முடிவு செய்துள்ள டிரம்ப்: தீவிரமடைந்துள்ள வர்த்தக போர்!

வாஷிங்டன்: சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார். 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை சீனாவும் அறிவித்தது.

ஏற்கனவே இருக்கும் 25% வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது. சீனாவின் இந்த வரிவிதிப்பு வர்த்தக சமநிலையை பாதிப்பதாக அமெரிக்க கூறி வந்த நிலையில், சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு தனது வர்த்தக ஆலோசகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவு நியாயமான முறையில் இருத்தல் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...