×

முத்தாலிக் சர்ச்சை பேச்சு

பெங்களூரு:  பெங்களூருவில் நேற்று முன்தினம், ‘ஜனஜாக்ருதி சம்ருதி’  என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ரீராம் சேனா கட்சித் தலைவர் பிரமோத்  முத்தாலிக் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பத்திரிகையாளர் கவுரி  லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அவர் எதற்காக இந்த கொலைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.  கர்நாடகாவில் நாய்கள் செத்துப்போனால் மோடி எதற்காக பதில் அளிக்க வேண்டும்?  கவுரி லங்கேஷ் போன்றவர்கள் இறந்தால், காங்கிரசிடம் ஏன் கேள்வி  கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? இந்த கொலை நடந்தபோது காங்கிரஸ் தானே ஆட்சியில்  இருந்தது?’’ என்றார்.பிரபல பத்திரிகையாளராக திகழ்ந்த கவுரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டு முத்தாலிக் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...