×

நிர்மலாதேவி 5வது முறை ஜாமீன்மனு

மதுரை: மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் ஜாமீன் கோரி திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி  ஏற்கனவே 4 முறை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவரது சார்பில் 5வது முறையாக நேற்று ஜாமீன் கேட்டு  மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. பேராசிரியர் முருகன் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்களும், மாவட்ட  நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதனிடையே ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் கோரி ஐகோர்ட்  கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் விசாரணையும்,  சாட்சியமும் பாதிக்கும். நிர்மலாதேவியை கருவியாக பயன்படுத்தியுள்ளனர் என சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை இன்றைக்கு  தள்ளி வைக்கப்பட்டது.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனமழையால் துபாய்க்கு 2-வது நாளாக விமான சேவை ரத்து