×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஜப்தி தகவலால் கலெக்டரின் காருடன் டிரைவர் ஓட்டம்

வேலூர்: வேலூர் கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கலெக்டர் காருடன் டிரைவர் ஓட்டம் பிடித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று  நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காலை 10 மணியளவில் கலெக்டர்  ராமன் காரை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் உடனடியாக காரில் கலெக்டர் என்று எழுதியிருக்கும் பலகையை துணியால் மூடினார். மேலும் கலெக்டர்  அலுவலக வளாகத்தில் இருந்து காரை எடுத்துச் சென்றுவிட்டார். அதற்கு பதிலாக அவசர அவசரமாக வேறொரு கார் வரவழைக்கப்பட்டு  நிறுத்தப்பட்டது. ஆனால், வெகு நேரமாகியும் கோர்ட் ஊழியர்கள் யாரும் ஜப்தி செய்ய வரவில்லை.சுமார் ஒரு மணிநேரத்துக்கு பிறகு கார் ஜப்தி நடவடிக்கை தொடர்பாக எந்த உத்தரவும் இல்லை என்பதை ஊழியர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.  இதையடுத்து கலெக்டரின் கார் மதியம் 1 மணியளவில் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.





தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...