×

காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும் மிரட்டுவதை அதிமுக அரசு நிறுத்த வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும் மிரட்டுவதை அதிமுக அரசு நிறுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்தை பலியிட்டு இட்லர் பாணி பயங்கரத்துக்கு உயிரூட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  இனியும் போலீஸ் மூலம் அச்சுறுத்துவது தொடர்ந்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 8 வழிச்சாலைக்காக விளைநிலங்களை எடுப்பதற்கு எதிராக விவசாயிகளும், மக்களும் போராடி வருகின்றனர். ஆனால் அவசர அவசரமாக நிலங்களை அளவிட்டு கல் ஊன்றும் செயலுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு...