×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள் : சமர்ப்பிக்க நாளை கடைசி

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற இன்று கடைசி நாளாகும். தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் காலை 10 மணி முதல் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.  சென்னை மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாளாகும்.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள். நேற்று மாலை வரை, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 19,783 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேர 12,826 விண்ணப்பங்களும் சேர்த்து மொத்தம் 36,961 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்று சென்றுள்ளனர். வரும் 28ம் ேததி தர வரிசை பட்டியல் ெவளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, ஜூலை 1 முதல் 5 வரை முதற்கட்ட கவுன்சலிங்கும், ஜூலை 16 முதல் 21ம் தேதி வரை 2ம் கட்ட கவுன்சலிங்கும் நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...