×

சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை: 1,20,500 பேர் இலவச பயணம்

சென்னை: சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் வழிதடத்தில் இலவச பயணம் அறிவித்ததால் நேற்று மட்டும் 1,20,500 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 25ம் தேதி சென்னையில் சென்ட்ரல்-நேரு பூங்கா மற்றும் சின்னமலை- டிஎம்எஸ் இடையேயான புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரயில் சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 25ம் தேதி முதல் 27ம் தேதி இன்று வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து நேற்று மட்டும் இந்த மெட்ரோ வழித்தடங்களில் 1,20,500 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் இலவச மெட்ரோ ரயில் சேவை இன்று கடைசி நாள் என்பதால் காலை முதல் இந்த 2 மெட்ரோ வழித்தடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுவது குறிப்பிடத்தக்கது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...