×

சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட் செய்த 2 நாட்களில் குழந்தைக்கு பாஸ்போர்ட்.....கர்நாடகாவில் வினோதம்

ஷிவ்மோகா: கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட் செய்த 2 நாட்களில் அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவைச் சேர்ந்த அக்ஷதா என்பவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவருக்கு அண்மையில் இந்தியாவில் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ஜெர்மனி செல்வதற்காக அக்ஷதா பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார்.

பாஸ்போர்ட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.  இதையடுத்து ட்விட்டர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்ரவாஜூக்கு அக்ஷதா கோரிக்கை விடுத்தார். அவர் ட்வீட் செய்த 2 நாட்களில் அக்ஷதாவின் குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அக்ஷதா, அமைச்சர் சுஷ்மா ஸ்ரவாஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...