உடுமலை: உடுமலை பகுதியில் அமராவதி ஆறு, நல்லாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. கான்டூர் கால்வாயில் நல்லாறு ஷட்டர் பகுதியில் இருந்து நல்லாறு செல்கிறது. இப்பகுதியில், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. பல்வேறு கிராமங்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் மணலை கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ளனர். பின்னர், வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி, இரு சக்கர வாகனங்களில் மணலை கடத்தி செல்கின்றனர்.இக் கொள்ளையை வருவாய்த்துறையினரோ, பொதுப்பணித்துறையினரோ கண்டுகொள்ளாமல் உள்ளனர். மணல் திருட்டை தடுக்காவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!