×

இந்தியாவில் இப்படியொரு மருத்துவரா.... ஆச்சரியப்படுத்தும் டாக்டர் அபிஜீத்

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏழை மக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கி மருத்துவர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இயந்திரம்போல் சுழலும் இன்றைய உலகத்தில் மனிதாபிமானம் என்றால் என்ன? என்று கேட்கிற நிலையில் தான் உள்ளோம். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மருத்துவர் அபிஜீத் இதில் விதிவிலக்காக உள்ளார். ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட இவர், இலவச மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார். அதுவும் அந்த மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று தனது சேவையை வழங்கி வருவது மருத்துவர் அபிஜீத்தின் சிறப்பு. வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளும் இவர் மருந்துகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்.

தேவை ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையும் அளிக்கிறார். இதுதொடர்பாக அபிஜீத் கூறுகையில், என்னால் முடிந்த உதவியை இந்த சமுதாயத்திற்கு செய்கிறேன். தினசரி கோவில்களுக்கும், மசூதிகளுக்கும் செல்கிறேன். அங்கு வாசலில் அமர்ந்து யாசகம் பெறும் பிச்சைக்காரர்களுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவையை வழங்குகிறேன். என் அடிப்படை நோக்கம் அவர்கள் வேலைக்கு சென்று உழைக்க வேண்டும் என்பது தான். அவர்கள் தொடர்ந்து பிச்சையெடுக்க கூடாது. அதனால் சிகிச்சை அளிக்கிறேன் என்கிறார், இந்த மனிதாபிமான மிக்க மருத்துவர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...