×

ட்வீட் கார்னர் : ரஷித்கானை இந்தியாவுக்கு தர மாட்டோம்

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் உள்ள ஆப்கானிஸ்தானின் 19 வயது சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் அற்புதமாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டிவிட்டரில் இவரை புகழ்ந்து தள்ளி ரசிகர்கள், ஒருபடி மேலே போய், ரஷித்கானுக்கு இந்திய குடியுரிமை கொடுத்து இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். இது குறித்து ட்வீட் போட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, ‘‘எங்களின் ஹீரோ ரஷித்கானால் ஆப்கானியர்கள் முழு பெருமை கொள்கிறார்கள்.

எங்கள் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தி தந்ததற்காக இந்திய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் சிறப்பை ரஷித் நினைவூட்டுகிறார். அவர் கிரிக்கெட் உலகின் சொத்து. எனவே மன்னித்து விடுங்கள். அவரை நாங்கள் யாருக்கும் தரமாட்டோம்’’ என கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்..