×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளில் போலீஸ் குவிப்பு: கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலியாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்ேகாரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 14ேபர் உயிரிழந்தனர்.   நேற்று வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் யாரும் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்திக்க வில்லை. துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை முற்றுகை போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவு துறை போலீசார் எச்சரித்தனர். அதைதொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அடையாறு கிரீன் வேஸ் சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர விசாரணைக்கு பிறகு அப்பகுதியில் வாகனங்களை அனுமதிக்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் கான்வாயை மறித்து போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் கோட்டை முதல் கிரீன்வேஸ் சாலை வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கத்தை விட கூடுதலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் எந்த நேரத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...