×

தற்காப்புக்காக சுட்டனர் என முதல்வரே கூறுவதால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை வேண்டும்

சென்னை: முதல்வரே தற்காப்புக்காக சுட்டனர் என்பதால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டானின் கூறினார்.
மதுராந்தகம் நகர திமுக செயலாளர் கே.குமார்-மலர்விழி குமார் தம்பதியின் மகள் மோகனவள்ளி (எ) மவுனிகா என்பவருக்கும், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.கண்ணன்-கவுரி கண்ணன் ஆகியோரின் மகன் பிரகாஷ் திருமணம் நேற்று அச்சிறுப்பாக்கத்தில் நடந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது, மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

நாடே ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் ெகாண்டிருக்கிறது. தமிழகமே தற்போது போராட்டக்களமாக மாறி வருகிறது. தூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பதவி விலக வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ேடாம். எங்களை ைகது செய்து சிறையில் அடையுங்கள் என்றால் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்கிறீர்கள். சிறையில் இடம் இல்லை. சிறைக்கு செல்ல அஞ்ச மாட்டோம்.மக்களின் உரிமைகளுக்காக சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். பல பேர் ஊழல் செய்துவிட்டு சிறையில் இருக்கிறார்கள். தற்போது செய்துள்ள ஊழல்களுக்காகவும் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள்.

திமுக உள்ளிட்ட 9 கட்சிகள், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. நான் சென்னையிலோ அல்லது சென்னைக்கு அருகிலோ போராட்டத்தில் கலந்து ெகாண்டிருக்க வேண்டும். இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டுப்போகும் வழியில் கூட எங்கேயாவது ஒரு போராட்டத்தில் கலந்து ெகாள்வேன். இந்த போராட்டத்தின் வாயிலாக பேசாத எடப்பாடி பழனிசாமியை பேச வைத்துள்ளோம்.  தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் போனதால் அவர் மீது வழக்கு போட்டிருக்கிறோம் என்று எடப்பாடி கூறுகிறார். ஆனால் ஒரு முதல்வர் சென்று பார்த்திருக்கலாமே என்று கேட்டால், அங்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது என்கிறார்.

ஒரு முதல்வர் போகலாம் என்ற சராசரி அறிவுகூட எடப்பாடிக்கு இல்லை. பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி கேட்டால், தற்காப்புக்காக சுட்டார் என்று எடப்பாடி சொல்கிறார். எனவே, ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்துவதை விட்டு, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ேவண்டும். தூத்துக்குடிக்கு நான் சென்றபோது, ‘‘நாங்கள் நிம்மதியாக இருக்க கலெக்டர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்’’ என்றார்கள். தற்போது முகாமிட்டுள்ள அதிகாரிகளிடம் பேசினேன். 2 அதிகாரிகள் மாற்றம் என்று தகவல் வந்தது.

அந்த அதிகாரிகளை ராமநாதபுரத்திற்கோ அல்லது தண்ணி இல்லாத காட்டுக்கோ மாற்றியிருக்க வேண்டும். ஆனால், சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

போராட்டத்தில் பங்கேற்ற மணமக்கள்
மதுராந்தகம் நகர திமுக செயலாளர் மகள் திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்த பிறகு, மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் சித்தாமூர் ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் மாரிமுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி பேசி விட்டு ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது, மதுராந்தகம் பஜார் பகுதியில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்ைத கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. அதில், ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு மணமக்கள் மோகனவள்ளி-பிரகாஷ் ஆகியோர் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் நேற்று காலை அச்சிறுப்பாக்கத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் திமுக செயல் தலைவரும்  எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மதுராந்தகத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கைதானவர்கள் நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

இன்று காலையில் இதே மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, திருமணம் முடிந்தவுடன் மறியல் போராட்டத்துக்கு நாம் செல்லவிருக்கி றோம், அதனால் கைது செய்யப்படுவோம் என்று தெரிவித்தேன். இன்று திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்ற காரணத்தால் மண்டபங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஒருவேளை சிறையில் கொண்டு சென்று அடைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

அப்படி சிறையில் அடைத்திருந்தால், தூத்துக்குடியில் நடைபெற்ற அநியாயத்தை எதிர்த்து நாமும் சிறைபட்டோம் என்ற பெருமை நமக்கு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது நமக்கு வருத்தம்தான். இத்தனை பேரை அடைத்து வைக்க சிறையில் இடமில்லை என்ற காரணத்தால் நம்மை மண்டபங்களில் அடைத்திருக்கிறார்கள். இது இன்றோடு முடிந்துவிடக் கூடிய போராட்டமல்ல. இந்த ஆட்சி ஒழிகிற வரையில், இந்த ஆட்சியை அப்புறப்படுத்தும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும். அவற்றில் பங்கேற்க அனைவரும் தயாராக இருங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  பின்னர் அவர் சென்னை திரும்பினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...