×

பலியானவர்களுக்கு நீதி பெற்று தர அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும்: கமல் அறிக்கை

சென்னை: தூத்துக்குடி சம்பவத்தில் பலியானவர்களுக்கு நீதி பெற்று தர அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்று கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரம் இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை போன்ற மக்களின் கேள்விகளுக்கு தமிழக அரசு விடையளிக்கவோ விளக்கமளிக்கவோ இல்லை.
உள்துறை செயலாளர் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில் கூட நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைதியாக உள்ளது.

எனவே அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் மற்றும் பணியிலிருந்து நீக்கம் செய்வதோடு நின்று விடாமல் அதற்கு முழு பொறுப்பான, அரசை நடத்தும் அரசியல் சக்திகளை தண்டனைக்குள்ளாக்குவது மிக அவசியம். இது போன்று கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது மக்களாட்சியின் மாண்பிற்கு உகந்தது அல்ல. மக்கள் நீதி மய்யம், விசில் செயலி மூலமாக, தமிழ்நாடு முழுக்க இருந்து கிடைக்கப்பெற்ற புகார்களின் மீதான நடவடிக்கைகளை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், நீதிமன்றம் மற்றும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மூலமாக முன்னெடுப்புகளை எடுக்கவுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களுக்கு நீதி பெற்று தரும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என கூறியுள்ளார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...