×

நிர்மலாதேவி ஜாமீன் மனு தள்ளுபடி

திருவில்லிபுத்தூர்,:  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மனு, திருவில்லிபுத்தூர் கோடைகால நீதிமன்றத்தில், நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...