×

சேலம் அருகே மழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து ரயிலில் வந்த வாலிபர் பலி

சேலம்: சேலம் அருகே நேற்று ரயில் பாதையிலுள்ள மின்கம்பி அறுந்து விழுந்து, ஈரோடு பாசஞ்சர் ரயிலில் பயணித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை - ஈரோடு இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் நேற்று மாலை 4 மணியளவில், சேலம் அருகேயுள்ள ஊத்தங்கரை அடுத்த வேலம்பட்டி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் இயக்கத்திற்கு மின் சப்ைள கொடுத்து வந்த உயர் அழுத்த மின்கம்பி அறுந்து ரயில்வே பாதையையொட்டி விழுந்தது. அந்த நேரம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.

மின்கம்பி அறுந்து விழும்போது ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் ஒருவரின் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார். 35 வயது மதிக்கத்தக்க அவர் வட மாநிலத்தை சேர்ந்த நபர் போல் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான...