தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மறுநாள் கடந்த 23ம் தேதி அரசு மருத்துவமனையின் முன்பு போலீசார் தடியடி நடத்தினர். அப்போது சிலர் பெட்ரோல் குண்டுகளை போலீசாரை நோக்கி வீசினர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஈடுபட்டதாக 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!