×

போலீஸ்காரர் மீது சகோதரர் குற்றச்சாட்டு: கொடுத்த பணத்தை கேட்டதால் வரவழைத்து கொன்று விட்டார்

தூத்துக்குடி: கொடுத்த பணத்தை கேட்டதால் ெடர்லைட் போராட்டத்துக்கு சகோதரரை வரவழைத்து போலீஸ்காரர் சுட்டுக்கொன்று விட்டார் என அவரது தம்பி சந்தேகம் கிளப்பியுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடந்த  துப்பாக்கி சூட்டில் தாமோதர நகரைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன்  மணிராஜ் (25) என்பவர் பலியானார். இவர் தூத்துக்குடி பிரையண்ட்நகர் போலீஸ்  குடியிருப்பு எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவருக்கு 3  மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. மணிராஜின் மனைவி பேச்சியம்மாள் என்ற அனுசுயா(23) தற்போது கர்ப்பிணியாக உள்ளார். மணிராஜின் தம்பி வேலுமணி, சகோதரி வரலெட்சுமி ஆகியோர் கூறியதாவது:

மணிராஜுக்கு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் ராஜா மிகவும் பழக்கமானவர். மணிராஜ்,  போலீஸ்காரர் ராஜாவுக்கு கடன் கொடுத்துள்ளார். அதனை ராஜா திரும்பத்தராமல் காலம் கடத்தி வந்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் போனில் பேசியுள்ளனர். இந்நிலையில் 22ம்  தேதியன்று காலை மணிராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீஸ்காரர் ராஜா பேசியுள்ளார். அதன் பின்னரே மணிராஜ் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார். கொடுத்த பணத்தை கேட்டதற்காக, போலீஸ்காரர் ராஜா, மணிராஜை வரவழைத்து கொன்று விட்டார் என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED யானை தாக்கி விவசாயி பலி