×

பாம்பு கடித்தது தெரியாததால் பரிதாபம்: பால் கொடுத்த தாயும், பெண் குழந்தையும் பலி

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் தன்னை பாம்பு கடித்தது தெரியாமல் பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டினார். விஷம் ஏறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் மாவட்டத்தில் உள்ள மண்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் நேற்று முன்தினம் மாலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை விஷப்பாம்பு கடித்தது. ஆனால், பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. இதனால், அவரது உடல் முழுவதும் விஷம் பரவியுள்ளது. இது தெரியாமல் தனது இரண்டரை வயது குழந்தைக்கு அவர் பாலூட்டினார். இதனால், குழந்தைக்கும் விஷம் பரவியது. இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலில் குழந்தை உயிரிழந்தது. பின்னர், தாயும் இறந்தார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்