×

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறி கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: பதுங்குமிடத்தில் நவீன ஆயுதங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வாலிபர் ஒருவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பண்டிப்புரா மாவட்டத்தில் உள்ள கண்டாபிரிங் கிராமத்தில்  முகமது யாகூப் என்பவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். நேற்று காலை அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். வாலிபரை தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில், ரம்பன் மாவட்டத்தில் உள்ள மர்கோத்தி பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளின் பதுங்கும்மிடத்தை கண்டுபிடித்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ராக்கெட் வீசும் கருவிகள் போன்றவற்றை கைப்பற்றினர். ராணுவம் வருவதை முன்கூட்டியே அறிந்த தீவிரவாதிகள், அங்கிருந்து தப்பி விட்டனர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...