×

துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் 28ம்தேதி ஆர்ப்பாட்டம் தேமுதிக அறிவிப்பு

சென்னை : தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபோது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. என்கவுன்டர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக சார்பில் 28ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை நிர்வாகிகளும்,  தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...