×

மக்களுக்காக போராடி சிறைக்கு செல்வதை பற்றி திமுகவினருக்கு கவலை இல்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம்: 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் முதல்வர் உள்ளார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரம் அச்சரப்பாக்கத்தில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் முதல்வரை சந்திப்பதற்காக அனுமதி கேட்கவில்லை,  அவரிடம் கோரிக்கை வைக்க செல்லவில்லை. முதலமைச்சர் அலுவலக அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என கூறியுள்ளார். எங்களை கைது செய்தால், அடைக்க சிறைகள் இல்லை.

மக்களுக்காக போராடி சிறை செல்வதை பற்றி திமுகவினருக்கு கவலை இல்லை, எத்தனையோ வழக்குகளை திமுகவினர் சந்தித்துள்ளனர் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 3 நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் நடைபெற்றது கொடுமையான சம்பவம். தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது. ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறும் அரசு முன்பே பேசியிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் முதல்வர் உள்ளார். ஆட்சியில் இருப்பவர்கள் விரைவில் எந்தெந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நாடு பார்க்கும் என்றும் கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை...