×

கனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு : 15 பேர் காயம்; 3 பேர் கவலைக்கிடம்

ஒட்டாவா: கனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் மிஸ்ஸிஸாகா பகுதியில் பாம்பே பெல் எனப்படும் இந்திய உணவகம் உள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறியது.

இதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்தித்தனர். காயம் அடைந்தவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உணவகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காவல்துறையினர் குண்டு வெடிப்புக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...