×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஐஎஸ்ஐ ஏஜென்ட் சிக்கினார்

லக்னோ:  உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோரகார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சிங்(35). இவர் கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ள இந்திய  தூதரக அதிகாரி வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் இந்திய  அதிகாரியின் வீட்டை உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, உத்தர பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை, உத்தரகண்ட் போலீஸ், ஜம்மு காஷ்மீர் ராணுவ புலனாய்வு அமைப்பு ஆகியவை இணைந்து  நேற்று முன்தினம் உத்தரகண்டில் உள்ள பிதோரகார் பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த ரமேஷ்  சிங்கை கூட்டுப்படையினர் கைது செய்தனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...