லண்டன் : தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன என ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீடியோ வெளியிட்டுள்ளார். கலவரத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆலை இயக்கப்படும் என்றும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் ஆலையை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளார்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!