×

தூத்துக்குடியில் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு : மேலும் ஒருவர் பலி...

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. தற்போது இறந்த இளைஞரின் பெயர் காளியப்பன் என்பது தெரிய வந்துள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர்...