×

தூத்துக்குடியில் பதற்றம் : பிரையண்ட் நகரில் காவல்துறை வாகனங்களுடன் போலீஸ் அணிவகுப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தடியடி நடத்தியதால் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் மர்ம நபர்களால் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டமாக நிற்காமல் கலைந்து செல்லுமாறு ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைவரும் கலைந்து தங்கள் வீடுகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தினர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செயல்படுவதாக காவல்துறையினர் ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இதனையடுத்து வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட தூத்துக்குடி பிரையண்ட் நகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்துகின்றனர். 100க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் போலீஸ் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி நகருக்குள் வெளியாட்கள் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழக பகுதியில் அத்துமீறி...