×

தூத்துக்குடி அண்ணாநகரில் போலீஸ் - பொதுமக்கள் மோதல் : மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பதற்றம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அண்ணாநகரில் போலீஸ் - பொதுமக்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. கல்வீசி தாக்குபவர்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டு வீசப்பட்டது. பல்வேறு வீதிகளில் ஆங்காங்கே திரண்டுள்ள மக்கள் காவல்துறை மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் விதிமுறைகள் மீறி விழா: அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு