×

தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் போலீசார் 2 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தடியடி நடத்தியதால் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

பின்னர் போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆத்திரமடைந்த மக்கள் போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறை வாகனங்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஒரு வாகனத்திற்கு வைக்கப்பட்ட தீ அணைக்கப்பட்டது. மற்றொரு வாகனம் கொழுந்து விட்டு எரிந்தது.

நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அம்மாவட்டத்தில் 25-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அனைத்து தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோவையில் பிரதமர் மோடி பேரணியில்...