×

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அம்பை ஏவியவர் யார்? கமல்ஹாசன் கேள்வி

தூத்துக்குடி; தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். அவர்களிடம் ஆறுதல் கூறிய பேசிய கமல், அவர்களின் துயரங்களை கேட்டறிந்த போது கண்கலங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போன உயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது. யாரையோ திருப்திப்படுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பது முக்கியம் இல்லை அது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நடத்தும் போது அங்கு அனுபவம் உள்ள மருத்துவர்கள் அருகில் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...