×

ஸ்டெர்லைட் போராட்டம் : புதுமாப்பிள்ளை பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த சவுந்திர பாண்டியன் மகன் மணிராஜ் (25). புதுமாப்பிள்ளையான இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது. உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்த மனைவியை அழைத்து வருவதாக வீட்டில் கூறிச் சென்றவர், மக்களின் உணர்வு மிகுந்த போராட்டத்தை கண்டதும் அதில் பங்கேற்றுள்ளார். ஆனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலையின் பின்பகுதியில் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை