×

பராமரிப்பு பணியால் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை-திருவள்ளூர் இடையேயான வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 26ம் தேதி வரை 3 நாட்கள் கீழ்கண்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆவடி-பட்டாபிராம் இடையே நள்ளிரவு 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், பட்டாபிராம்-ஆவடி இடையே இரவு 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது, பட்டாபிராம்-ஆவடி இடையே இயக்கப்படாமல், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே இரவு 3.40 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100