×

தங்கவயல் தொகுதியில் பாஜ தோல்வி குறித்து ஆலோசனை

தங்கவயல்: சட்டபேரவை தேர்தலில் தங்கவயல் தொகுதியில் தோல்வி ஏற்பட்டது குறித்து பா.ஜ. நிர்வாகிகளுடன் முன்னாள் எம்.எல்.ஏ. ஒய். சம்பங்கி  ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தங்கவயல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒய். சம்பங்கி மகள் அஸ்வினி போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபாசசிதரிடம் தோல்வியடைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ கோட்டையாக இருந்த தங்கவயல் தொகுதி தற்போது காங்கிரஸ் கேட்டையாகி விட்டது. இதனால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஒய்.சம்பங்கி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்த சம்பங்கி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேலும் ஆலோசனை நடத்தினார். யாருக்கும் தெரியாமல் தனது தோட்டத்தில் ரகசியமாக கூட்டம் நடத்தியதால் பா.ஜ மூத்த நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்